my home

Powered By Blogger

Friday, 18 November 2011

ஐஸ்வர்யா ராய்க்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.





ஐஸ்வர்யா ராய்க்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை அப்படியே அம்மாவைப் போல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஐஸ்வர்யாவுக்கு உள்ளதைப் போலவே ஓவியம் போன்ற அழகிய கண்களாம் குழந்தைக்கு.
முதலில் சிசேரியன் பண்ணுவதாகத்தான் டாக்டர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஐஸ்வர்யாதான்,அதெல்லாம் வேண்டாம், சுகப் பிரசவமாகவே இருக்கட்டும் என்று கூறி விட்டாராம். இதனால் சுகப் பிரசவமாகவே தனது முதல் மகளைப் பெற்றெடுத்துள்ளார் ஐஸ்வர்யா. பிரசவத்தின்போது அவர் மிகவும் மனோ திடத்துடன் இருந்ததை தங்களது பிளாக்குகள் மூலம் கணவர் அபிஷேக் பச்சனும், மாமனார் அமிதாப் பச்சனும் உருகி உருகி எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், குட்டிப் பாப்பாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற ஆலோசனைகள் பச்சன் வீட்டில் சூடு பிடித்துள்ளதாம். இருப்பினும் தற்போதைக்கு பேட்டி பி என்று செல்லமாக பெயரிட்டுள்ளனராம்.
இதற்கிடையே, ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமிதாப் பச்சன் இருவரும் விரைவில் வீடு திரும்ப தயாராகி வருவதாக தனது பிளாக்கில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தாயும், மகளும் மிக மிக நன்றாக உள்ளனர். விரைவில் வீடு திரும்புவார்கள் என்று கூறியுள்ள அமிதாப் தனது ஸ்டைலில், ஷோலே படப்பிடிப்பின்போது ஜெயாபாதுரியும் கூட கர்ப்பமாக இருந்தார் என்று கூறியுள்ளார்.
மேலும் தனது பேத்தியுடன் ஒரு நாளை செலவிட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார் அமிதாப். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு நாள் முழுக்க அந்தக் குட்டிக் குழந்தையுடன் இருந்தேன். அதன் அசைவுகளை வேடிக்கை பார்ப்பதே சுவாரஸ்யமானது. மிகவும் அமைதியான குழந்தை. அதற்காகவே பிரத்யேகமாக வாங்கப்பட்ட பிறந்த குழந்தைகளுக்கான உடையில் அழகாக படுத்திருந்தது. கண்களை எப்போதும் மூடியே வைத்திருக்கிறாள். எப்போதாவது திறக்கிறாள். லேசான புன்னைகையும் கூட அவ்வப்போது வருகிறது. இந்தப் புதிய உலகம் குறித்த கனவோ, என்னவோ என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

No comments:

Post a Comment

About Me

My photo
srilanka, Sri Lanka
i'm jinothini from jaffna...